கண்ணீர் பூக்கள்

என் தாய் வசந்தாமகன் புகைப்படங்கள் சில என் நண்பர்கள் கண்ணீர் பூக்கள் கடவுள் பாடல்கள்   காதல் பாதை மாறிய பயணங்கள் ஆல்பம் தமிழ் தந்த சித்தர்கள் ஓம் நமசிவாய சித்தர்கள் வரலாறு



 


ஏக்கம்

  ஆயிரம் குறல்கள்

  கூடி ஆறுதல் சொன்னாலும்

  அடிமனதில்  இருப்பதென்னவோ

  அன்னையின் முகமே . . .

 

  


05.09.1982

 

நீயே விட்டு

போன பின்பு

பிறந்தநாள் என்பது

இனியேது . . .

 


எனக்கு

நான் நினைத்தது

எதுவும் கிடைத்ததும்

இல்லை கிடைத்தது

எதுவும் நிலைத்ததும் இல்லை  Yell


தளிரின் தாக்கம்
ஏனம்மா என்னை

விட்டு சென்றாய்

நீ

 

எனக்காய் இருந்தாய்

துணை நீ எதற்க்காய்

சென்றாய் சொல் நீ

 

அசிங்கமாய் நான்

பிறந்ததால் என்னை

அழவிட்டு சென்றாயோ

 

மயானக்கொள்ளைக்கு சென்றாய்

நீ மனஏக்கத்தில்

விழந்தேன் நான். . .


 

தாய்மடி

அன்புக்கு தினம்

ஏங்கும் மடி

ஆசையாய் விழி

தூங்கும் மடி 

 

அன்னம் சற்று

குறைந்த போதும்

அன்பை அதிகம்

ஊட்டும் மடி

 

தாலாட்டு சற்று

நின்ற போதும்

காலாட்டும் இந்த

தாய்மடி

 

கவலைகள் வந்து

தேங்கும் பொழது

கண் கசக்க

மடி ஒன்று வேண்டுமடி

 

அன்னையில்லா பிள்ளைகள்

மனம் அன்புக்காய்

தினம் ஏங்குமடி

 

அந்த கண்ணீரை

துடைக்க ஆள்யாரும்

இல்லையடி


என்ன செய்வேன்

வந்த சோகம்

என்னை வாட்டி

எடுக்குது வாய்விட்டு

அழ உசுறு துடிக்குது

 

உன்மடியில் உறங்க

மனசு கேக்குது

மரணமோ அதை

மண்டியிட்டு தடுக்குது. . .


எனக்குள் மெழகு

உறங்கதான் நினைத்தேன்

 உன்னை நினைப்பதற்க்கு

 முன்னால்

 

 உருகிதான் நின்றேன்

 ௨ன்னை இழந்ததற்க்கு

 பின்னால். . .


05.09.1982

 பிறந்ததே வீண்

 என்று நினைக்கின்றேன்

 அதனால் தான்

 பிறந்த நாளையே

  வெறுக்கிறேன். . .

 


 வெறுப்பு

 மனசு மாசற்று

 கிடப்பதால் கனவு

 காணமல் போகுது

 வாழ்க்கை பிடிப்பில்லா

 போனதால் வாழ்வதே

 வீணாக தோணுது. . .


தேய்பிறை காலம்

 

 துன்பங்களின் வலியை

 தூசி தட்டி பார்த்தேன்

 துயரங்களின் மடியில்

 தூளிகட்டி ஆடினேன்

 தொட்டதெல்லாம் தோல்வியாய்

 போனது கெட்டதெல்லாம்

 என் குடியாய் ஆனது. . .

 


காத்திருக்க நேரமில்லையோ

பாவங்கள் நான்

செய்திருந்தால் என்னை

பாடாய் படுத்தியிருக்கலாம்.

 

பார்த்து பார்த்து

வளர்த்த தாயை

சேயிடம் கொஞ்ச நாள்

வாழவிட்டிருக்கலாம்

 

வாந்தி மயக்கம்

நோயை தந்திருக்கலாம்

தீராத நோயை

உடலுக்குள் நுழையா தடுத்திருக்கலாம்

 

வந்த காலனே

என் வீட்டு

வாசலிலே கொஞ்ச நாள்

நீ காத்திருந்திருக்கலாம்

  

காத்திருக்க நேரமில்லை

வராதவன் வந்திருக்கிறேன்

என்று வசதியாய் அழைத்துச் சென்றாயோ

என் அன்னையை . . .

 


திருமணக்கோலம்

 

கனவுகள் கை௬டும்

நேரம் வீற்றுருப்பதோ

திருமணக்கோலம்

 

உறவினர்களை சொக்க

வைக்கும் மேளம்

உறுதுணையாய் நீயில்லா

மனம் வாடும்

 

உண்மையிலே மனதில்

பெரும் சோகம்

அன்னையை இழந்த நான்

அழியும் வரை அலங்கோலம்


வேர்

ஆணீவேராய்

நீயிருந்தாய்  ஆழ

புதைந்து  அனைத்தையும்

சுமந்தாய்

 

விழதுகள் வளர

உன் பாரங்கள்

தளர தவம்

கிடந்தாய்

 

 

விழுதுகள் மண்ணை

துளைத்தது உன்

கவலைகள் கொஞ்சம்

இலைத்தது

 

உன் மனம்

சற்று அமைதியை

நினைத்தது அதற்க்குள்

 

 

கல்லாய் நிற்க்கும்

அந்த கருணையில்லாதவன்

மரண ஓலையை  மடித்து

புயலாய் வீசியதால்

புழுதியில் சாய்ந்தாயோ . . .

 


தாடி

தலையில் சுமையுடன்

தரையில் நடக்கும்

எனக்கு மறதியில்

மலர்ந்த முள்செடி


மெளனம்

 

வாய்திறந்து பேசிருந்தால்

உன் வலியை

போக்கியிருப்பேன்



வந்து விழுந்த

இடிதனை வராமல்

தடுத்திருப்பேன்



உண்மையை நீ

மறைத்ததால் உதிர்ந்து

போய்க்கிடக்கின்றேன்

 

துன்பத்தில் தான்

தினம் சிரிக்கின்றேன்

உன் துனையில்லா

நான் தவிக்கின்றேன்


ஆசையில் விழுந்த அழியா இடி

 

அடுக்கு மாடி

கட்டிடங்கள் கட்டிடவே

ஆசைகொண்டேன்

 

அத்தனையும் உன்

பெயரை போற்றிடவே

ஆசைகொண்டேன்

 

அரும்புமீசை வந்தபொழுதே

அன்னை மீது

மீளா ஆசைகொண்டேன்

 

பார்த்த வேளையிலே

பட்டுசீலை வாங்கிதர

ஆசைகொண்டேன்

 

நீ படுத்துறங்கும்

பாயாய் நானிருக்க

ஆசைகொண்டேன்

 

கடைசியில் கொண்ட

ஆசையை எல்லாம்

கொன்று விட்டு

கொள்ளியாய் நான் நின்றேன்


நான்

 

அழகு என்ற

சொல்லுக்கு ஆச்சரியகுறி

நான்

அன்பு என்ற

சொல்லுக்காய் ஏங்கும்

அடிமை தான் - நான்

 


அன்றும் இன்றும்

அன்று

தந்தையின் பிரிவு

நம்மை தாக்கிய

பொழுது எங்களுக்காய்

அன்னை நீயிருந்தாய்

 

 

துடித்த பிள்ளைகளுக்கு

தூணாய் துணிந்து

நின்றாய்

 

இன்று

உன்னையே இழந்து

விட்டு உருகுலைந்து

நிற்க்கிறேன் எனக்கு

துணையாய் யார் இருக்கா


மனதின் கதை

 

கனவுக்கு தாய்

தந்தை கிடையாது

அது கண்களில்

வாழ்கிறது



எனக்கும் தாய்

தந்தை கிடையாது

ஏக்கங்கள் தேங்கும்

பொழுது



கண்களுக்கு தாகங்கள்

எடுக்குது தாகத்தை

தணிக்கிறேன் மனசுக்குள்

சோகத்தை தினிக்கிறேன்.


சமர்ப்பணம்


வேலைக்கு சென்று

வந்தேன் வியர்வை

கொஞ்சம் சிந்திவந்தேன்



அதனால் ஊதியம்

கொஞ்சம் அள்ளி

வந்தேன்



உன் கையில்

கொடுத்திடவே விரைந்து

வந்தேன்



ஊதுபத்திகள் உன்படத்தில்

எறிந்திடவே விழுந்த

சாம்பலாய் நான் சிதறிபோனேன்


உறக்கத்தை மீண்டுவந்து

பல் தேய்க்கா

காபி குடித்தால்

அந்த உறிஞ்சசூட்டில்

உன் நினைவு



உணவை எடுத்து

உதட்டில் வைத்தேன்

அதில் ஊறியருசியில்

உன் நினைவு



பேருந்தில் பயணம்செய்ய

ஜன்னலோர கம்பியில்

தலைச்சற்று சாய்த்தால்

சிவந்த விழியில் வழிந்த நீராய்

உன் நினைவு



உழைப்பால் வென்ற

ஊதியத்தை உரசிப்பார்த்தேன்

விழுந்த வியர்வைதுளியில்

உன் நினைவு



இப்படி உன்நினைவு

மட்டும் மனதில்

நீங்கா இருக்கே



ஒருவேளை உயிரோடு

நீ இருந்திருந்தால்

உன்நினைவுகள்  என்னுல்

கொஞ்சம் ஒளிந்திருக்குமோ.