கடவுள்
மாரியம்மா காளியம்மா
மதுரை-வீரன் செல்லியம்மா
உங்களால் நான்
பட்ட பாடு போதும்
என் வசந்தா அம்மா
துணை ஒன்றே போதும்.
தெய்வங்கள்
தேவையில்லை
தெருவில் நின்றாலும்
பரவாயில்லை.
என் ஆழ் மனதிற்க்கு
ஆண்டவனை
வணங்குபவர்கள் தவறுகள்
செய்திடலாம்
அன்னையை வணங்கும்
நீ ஆத்திரம்
கொல்லாதே
அனைவரிடமும்
அன்பு காட்ட
மறவாதே
உதவிகள்
செய்வதில் மனம்
வெறுக்காதே
அழுதுகொண்டே
இருக்காதே அவபெயர்
வாங்காதே
அன்னை பெயர்
எடுக்க வேண்டும்
மறவாதே.
தீர்ப்பு
கருங்கல்லால் செய்தார்கள்
என கவலை கொண்டேன்
அதன் காரணத்தை
இன்று கண்டுகொண்டேன்
அரக்ககுணம் கொண்ட
அசுரன் என்பதால்
நல்லோர் எழுதிய தீர்ப்போ.
கடவுளை வணங்க
கைகூப்பி நின்றேன்
கருணை உள்ளம்
கொண்டவன் காப்பாற்றுவான்
என்று
கூப்பியவரை எல்லாம்
குழியில் தள்ளுபவன்
குறுடனோ பார்பவர்கள்
இழிக்கலாம் பாதிக்கப்பட்டவன்
நானல்லோ.
வெறுப்பு
ஆண்டுகள் கழிந்து
போனாலும் ஆயுள்
முடியும் வேலையிலும்
ஆண்டவனை நினைப்பேனோ
அன்னை உன்னை
மறப்பேனோ.