Custom Rich-Text Page

என் தாய் வசந்தாமகன் புகைப்படங்கள் சில என் நண்பர்கள் கண்ணீர் பூக்கள் கடவுள் பாடல்கள்   காதல் பாதை மாறிய பயணங்கள் ஆல்பம் தமிழ் தந்த சித்தர்கள் ஓம் நமசிவாய சித்தர்கள் வரலாறு



நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

 
காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.
 
----------------------------------------------------------------------------------------
 
 
 
நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள  கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர , நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை , குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும். 


மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்


ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி :
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி : 
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை


துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்


விருச்சிக ராசி  :
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி : 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி :
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

-------------------------------------------------------------------------------------------------------------
 

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும்

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.

அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.

அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர்       - சிதம்பரம்

இராமதேவர்   - அழகர்மலை

அகஸ்தியர்    - திருவனந்தபுரம்

கொங்கணர்   - திருப்பதி

கமலமுனி      - திருவாரூர்

சட்டமுனி       - திருவரங்கம்

கரூவூரார்       - கரூர்

சுந்தரனார்      - மதுரை

வான்மீகர்       - எட்டிக்குடி

நந்திதேவர்     - காசி

போகர்            - பழனி

மச்சமுனி       - திருப்பரங்குன்றம்

பதஞ்சலி        - இராமேஸ்வரம்

தன்வந்திரி     - வைதீஸ்வரன்கோவில்

கோரக்கர்       - பொய்யூர்

குதம்பை சித்தர் - மாயவரம்

இடைக்காடர்      - திருவண்ணாமலை

பாம்பாட்டி சித்தர்   - சங்கரன்கோவில்

சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக

-----------------------------------------------------------------------------------------------------


சித்தர்களும் மழையும்

 
அந்த நாளில் சில ஊர்கள் வறட்சியால் வாடின.மக்கள் தண்ணீர் இன்றிச் செத்து விழுந்தனர் .கால் நடைகளும் நீரின்றித தவித்த போது அந்த ஊர் பக்கமாக வந்த சித்தர்கள் அதற்கான காரணத்தை கண்டறிந்து ஊரின் அமைப்பில் சில மாற்றங்கள் செய்து மழை பெய்ய செய்தனர் .
மழை பெய்வது இயற்கையின் கையில் .....
அதற்கு ஒரு ஊரின் அமைப்பு என்ன செய்யும் என்று கேட்கலாம் .ஆனால் சித்தர்கள் மழைப் பொய்க்காமல் இருக்க, நுட்பமான பல வழி முறைகளைத் தெரிந்து வைத்திருந்தனர்.அதன் படி அவர்கள் ஊரின் முக்கியமான இடங்களில் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களையும் வெட்ட வெளியில் சில கற்களையும் நட்டு வைத்துச் சென்றனர் .
கொதிக்கும் வெயில் நேரங்களில் கல் மரங்களில் அக்னி அலை உருவாகும் . குளிர் நிழல் மரங்களிலோ அதற்கு நேர் எதிரான அலை உருவாகும் .இரண்டும் கலந்திடும் போது அது ஒரு வித ஜீவ வாயுவாக மாறி மேலெழும்பும். அப்போது சுற்று வட்டாரத்தில் சுமாரான அளவு கார் மேகங்கள் இருந்தாலும் அவைகளி அந்த வாயுக்கள் இழுத்திட அங்கே மழை பேயும் வாய்ப்பு உருவானது.
இன்று ஊரில் அப்படிப்பட்ட சிறப்புகளை விரிவாக்கம் என்ற பெயரில் நாம் இழந்து விட்டோம்.
 
 
-----------------------------------------------------------------------------------------------

 சித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...

தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.

அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.

ஒம் சிங் ரங் அங் சிங்

இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------

 

 

சித்தர்கள் தங்களது குருவின் முன்னிலையிலோ அல்லது குருவின் அருளால் வாசி என்னும் மூச்சு பயிற்சியின் போது‌ அவர்களின் ஜீவன் எதிர்பாராமல் lock ஆகிறது அதாவது சப்த நாடிகளும் அடங்கிய. கபாலத்தில் மட்டும் ஓம் என்ற மந்திரம் தொடா்ந்து உச்சரிக்கும் இங்குதான் அவர்கள் குரு மகத்தான மந்திரம் ஒன்றை அவர்களின் காதில் ஓதி நீங்கள் ஜீவசமாதி யாக இன்னும் நாள் உள்ளது என்பார்கள் உடனே அவர்களின் Lock release ஆகும்.குருவின் மகிமை புரிகிறதா. ஒருவன் இறந்த பிறகு அவனுக்கு 9 வழியாக உயிர் பிரிகிறது என்றும் மேலும் அவணை புதைப்பதால் அவன் கபாலத்தில் thanamjai எனும் பிராணமண்டலங்களில் 3 நாட்கள் உயிரோடு இருக்கும் என்றும் சித்தர்கள் அதை கொண்டு அந்த 9 பிராண மண்டலங்களில் பிராணம் ஏற்றி உயிர் கொடுப்பர் இப்படி சித்தர்களின் சாகாக்கலையின் ஒரு கலை என்று தெரிகிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல் இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும், 12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும்
சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்
சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால்தான்
அவ்விடத்துக்குச் நீங்கள்செல்ல முடியும்.

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.
தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம், திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை, ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.

சித்தர்கள் கண்ட அருந்தவ யோகத்தைப் பயின்று
அருந்தவ யோகிகள் ஆவோம்.

சித்தர்கள் சன்னதியில் செத்தவனும் உயிர் பிழைப்பான் என்ற கூற்று உறுதியாகிறது இப்போது புரிகிறதா சித்தர்களின் மகிமை

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

 -------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

** அஷ்டமாசித்துக்கள்:

* சித்தர்கள் சர்வ சாதரணமாக , சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். அந்த சித்து வேலைகளுக்கு - அஷ்டமா சித்து என்று பெயர். அப்படி என்ன என்ன ?

* அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

* மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

* லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

*கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

*பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

*பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

*ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

*வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

* இவ்வளவு திறமை வளர்த்துக் கிட்டு - அவங்க உடலையும், மனசையும் சுத்தமா வைச்சுக்கிட்டு - கடவுளை நினைத்து , தியானம் பண்றாங்க. ... அவ்வளவு பரிசுத்தமான ஆன்ம சுகம் அடையும் போது தான், நம்முடைய ஆத்மா , நம்ம பிறப்பின் நோக்கம் நமக்கு தெரிய வரும். .. ஆனால், அந்த நிலைமை அடைவதற்கு - பல ஜென்மம் எடுக்கணும் போலே.. கொஞ்சம் கொஞ்சமா .. அதற்க்கு மனசை பக்குவப் படுத்தி, முதல் அடி எடுத்து வைப்போம். இறை சிந்தனை வளர்த்துக் கொள்வோம்.

 -------------------------------------------------------------------------------------------------------------

 

 

சிவ வழிபாடு செய்வது எப்படி ?
 
 
வேண்டுதல், பிராத்தனை, வழிபாடு என்பது ஒரு மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு.  அந்த வகையில் சிவ வழிபாடு பற்றி பார்போம். 
 
முதலில் கொடி மரத்தை வணங்கி,  பின் பலி பிடத்தை வணக்க வேண்டும். பலி பிடம் என்பது நந்தி தேவருக்கு பின் உள்ளது. இது அந்த ஆலயத்தின் பிரதான மூர்த்தி யாரோ அவரின் பாத கமலனக்களை குறிக்கும் விதமாக தாமரை வடிவில் இருக்கும்.
 
 
இந்த பலி பிடம் பாசத்தை உணர்த்துகிறது.  அதாவது மனித வாழ்வில் இயல்பான காம, குரோத, லோப, மோக, மத மாச்சரியங்களை பலி கொடுப்பதாக உறதி செய்து கொள்ள வேண்டும்.
 
நமது ஆணவம், அகங்காரம் பற்றுகளை பலி இட்ட பின்னரே தெய்வ சித்தி கிட்டும். கோவிலின் எட்டு மூலைகளிலும் அஷ்ட திக் பாலகர்களான இந்திரன் அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், எசாணன் முதலியவர்களுக்கு தலைமை பிடமாக இருப்பது பலி பிடமாகும். 
 
கொடி மரத்திற்கு அடுத்து பலி பிடத்தை வணங்கி நந்தி தேவரிடம் வருகிறோம். 
 
யார் இந்த நந்தி?
 
உத்தமமான முனிவர் கிலாதர்.  அவர் பத்தினி சித்ரவதி அம்மையார்.  இந்த முனி தம்பதியரின் தவப்பயனால் கைலைநாதன் ஸ்ரீ சைலம் போக என்று அன்பு கட்டளை இட்டார். 
 
பரம்பொருளின் உத்தரவு படி ஸ்ரீ சைலம் வந்தார்கள். புத்திர பாக்கியம் வேண்டி பல வேள்விகளை நடத்தினார்கள். கடும் தவம் புரிதார்கள். 
 
கருணை கடலான சிவபெருமான் அருளால் சூரியனை போன்ற பிரகாசமான மகன் பிறந்தான்.  அன்னை சிதிரவதி அம்மையார் பாசத்தை பொழிந்து மகனை சீராட்டி தாலாட்டி வளர்த்தார்.  சகல கலைகளையும் தந்தை கிலாதர முனிவர் கற்பித்தார். 
 
வளர்ந்து வாலிபத்தை தொட்டார் நந்தி.  எல்லா தாயாருக்கும் உள்ள கவலை சித்ரவதிக்கும் வந்தது. பருவத்தே திருமணம் செய்ய ஆசை பட்டாள்.  ஆனால் நந்தி பகவானோ தவ கோலம் பூண்டார். 
 
பெற்று வளர்த்து சீராட்டி பாராட்டி வளர்த்த தாய் தந்தையரை வணங்கி.... என்னை ஆசிர்வதியுங்கள்.  நான் பரம் பொருளை காண கடும் தவம் செய்ய போகிறேன் என்றார் ரிஷி குமாரன் நந்தி. 
 
காலம் போடும் கணக்கை புரிந்து கொண்ட முனி தம்பதிகள் ஆசிர்வதித்தார்கள்.   எல்லா வளமும் பெற்று மங்கலம் பெருகுக என்று வாழ்த்தினார்கள். 
 
விடை பெற்ற நந்தி  அக்கினியில் பல ஆண்டுகள் நின்று கொண்டே தவம் செய்தார்.  மெய் வருத்த செய்த தவத்தின் பயனாக பரமேஸ்வரன் நேரில் வந்தார். 
 
 மகனே... எனது ஆணை எங்கும் நிறைத்தது.  அதுபோல் இன்று முதல் உனது அதிகாரமும் எங்கும் நடக்கும்.  அதனால் அதிகார நந்தி என்று சொல்லபடுவாய் என்று ஆசிகள் கூறினார். 
 
நந்தி தேவன் அதிகார நந்தி என்று பெயர் பெற்ற பின்னாலும் கடும் தவம் செய்தார்.  அந்த தவத்தின் பயனாக மீண்டும் வரங்கள் தந்தார். 
 
அனைத்து பூதங்களுக்கும் உன்னை தலைவனாக ஆக்குகிறேன்.  சிவ ஞானத்தை  உலகிற்கு போதிக்கும் ஆசிரியனும் நீ.  எனக்கு வாகனமாகவும், கைலயில் காவல் தெய்வமாகவும் நீயே இருப்பாய்.  அதனால் என்னை போலவே  நீயும் நித்தியனாக இருப்பாய் என்று வரமளித்தார். 
 
நந்தி சைவர்களுக்கு குரு.  நந்தி என்றாலே எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பார் இருப்பவர் என்று பொருள்.  இவரின் அனுமதி பெறாமல் சிவ தரிசனம் செய்வது தவறு.  அப்படி வணக்கினால் சிவனருள் கிட்டாது. 
 
பொதுவாக சிவ ஆலையத்தில் நந்தி தேவர் எப்பொதும்சிவனை துதித்து வணங்கியபடியே இருப்பதால்,  சிவனுக்கும் நந்திக்கும் இடையே செல்வதை தவிர்க்க வேண்டும்.  நந்தி தேவர் வழிபாடு பிரதோஷ காலத்தில் செய்வதே பிரதானமாக இருக்கிறது. 
 
திரயோதசி அன்று மாலை சூரிய அஸ்த மனத்திருக்கு முன்னதாக ஒன்னரை மணி நேரம் பிரதோஷ காலமாக கருதபடுகிறது.  அந்த நேரத்தில் தான் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே,  அண்டத்தின் மீது நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். 
 
இவ்வேளையில் உலகில் உள்ள அனைத்து சீவன்களும் சிவபெருமானுக்குள் ஒடுங்கி விடுவதாக புராணம் சொல்கிறது.  பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும் சிவனையும் துதிப்பது 1000 அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். 
 
கல்வி, செல்வ வளம் பெற்று, கடன் தொல்லை, வறுமை, மனக்கவலை நீங்கி குறிப்பாக மரணபயம் அற்று வாழ பிரதோஷ வழிபாடு சிறப்பு.  நந்தி தேவர் மந்திரம். 
 
தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமைகி 
தன்னோ நந்தி பிரசோதயாத் 
 
நந்தி தேவரை வணங்கி அனுமதி பெற்று சிவதரிசனம் செய்த பிறகு சண்டிகேசுவறரை வணங்க வேண்டும். 
 
யார் இந்த சண்டிகேசுவரர்?
 
இவர் ஒரு சிவனடியார். சிவ சன்னதியில் சிறு இடைவெளி விட்டு இடது புறத்தில்  சிறிய ஆலயம் அமைக்க பட்டிருக்கும்.  இவருக்குயென தனியாக மாலையோ நெய்வேதியமோ கிடையாது. 
மூலஸ்சாணத்தில் சார்த்திய மாலையும், மிதமுள்ள நெய்வேத்தியமும் தான் இவருக்கு உரியது. 
 
எப்போதுமே தவ நிலையில் இருந்து சிவ பெருமையை நெஞ்சுருக பிரதித்து கொண்டிருப்பார்.  அவரை வணக்கும் பொது சிவனருள் பரிபோரனமாக கிடைக்க வேண்டும் என்று இவரிடம் கேட்க வேண்டும். 
 
பின் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி கொடி மரத்திருக்கு முன்னாள்  நமஸ்காரம் செய்தால் சிவதரிசனம் நிறைவு பெறுகிறது.
 
------------------------------------------------------------------------------------------------------------
 
 கோவில் வழிபாட்டு முறைகள்

கோவில் வழிபாட்டு முறைகள்

கோவில் வழிபாட்டு முறைகள்

 

ஆன்மிகம். மிகவும் உயர்ந்த சொல் இது. ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று, மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது.

கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்; கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் போடுவதுமாக - வழிபாட்டு முறைகளும் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன.

பிரதோஷத்தன்றோ, நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு, கனகச்சிதமாக பக்தி வெளிப்படுகிறது. இவையெல்லாமே தவறு! கோவில் அர்ச்சகராக இருந்தாலும் பூஜை நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் விக்கிரகங்களைத் தொடக்கூடாது.

இவையெல்லாம் ஆன்மிகம் அல்ல. ஏற்கனவே போட்டு வைத்த நல்ல வழி இருக்கும்போது, நாமாக ஏன் புதுப்புதுப் பாதைகளை உருவாக்கி, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? முன்னோர் காட்டிய அந்தப் பாதையைப் பார்க்கலாம் வாருங்கள்! முன்னோர்களின் அந்தப் பாதை, அவர்களின் அனுபவத்தில் உண்டானது. அவர்களின் அனுபவங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து அனுபவிக்கலாம்.

கோவிலுக்குச் செல்லும் போது செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், கோவிலின் உள்ளே செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், நமது ஆகம நூல்கள் விரிவாகவே கூறுகின்றன.

அவற்றை உணர வேண்டியது நமது கடமை. உணர்ந்து செயல்பட்டால்தான், பலன் கிடைக்கும். ஆனால்...

இப்போது, உதாரணமாக - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், கைபேசிகளில் (செல் ஃபோன்களில்) சிம் (SIM) கார்டே போடாமல், பேச முயற்சிக்கிறோம். நடக்குமா? அதுபோல, ஆலயத்தில் நாம் செய்யவேண்டியவைகளைச் செய்தால்தானே பலன் கிடைக்கும்?

கோவிலை நெருங்கியதும், கோபுரத்தின் அருகே (கீழே) நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். ஆனால் இந்த நியதி பெண்களுக்குப் பொருந்தாது. ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட வேண்டும். அதற்கு மேல் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடக் கூடாது.

அடுத்து, கோவிலின் உள்ளே நுழைந்ததும், கொடி மரத்தின் அருகில் விழுந்து கும்பிட வேண்டும். கோவிலின் உள்ளே நாம் விழுந்து கும்பிட வேண்டிய இடம் இது ஒன்றுதான்.கொடிமரத்தைத் தாண்டி, உள்ளே உள்ள எந்தச் சன்னிதியிலும் விழுந்து கும்பிடக் கூடாது.

அடுத்து, கொடிமரத்தைத் தாண்டியதும் பிராகார வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும்போது, அவசர அவசரமாக ரயிலைப் பிடிக்கும் அவசரத்தோடு வரக்கூடாது. இதற்கும் முன்னோர்கள் ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள். அதாவது... நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண், கால்களில் விலங்கிட்டு, கைகளில் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயுடன் நடந்து வரும்போது, சொட்டு கூடச் சிந்தாதபடி மெளனமாக நடந்து வருவதைப்போல, வலம் வர வேண்டுமாம்.

இதற்கு முக்கியமான காரணம்... கோவில் பிராகாரங்களில் குறுக்கும் நெடுக்குமாகக் கற்களைப் பாவியிருப்பார்கள்; பதித்திருப்பார்கள். அந்தக் கற்கள் சற்று சொரசொரப்பாக, சிறுசிறு முட்கள் கொண்டதைப் போல இருக்கும்.அக்கற்களின் மேல் கால்களைப் பதித்து மெள்ளமாக நடந்து வரும்போது, அக்கு பிரஷர் போல நரம்புகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் கிடைக்கும்.இதன் காரணமாகவே, பிராகாரங்களில் மெள்ளமாக நடந்து வலம் வரவேண்டும் என்றார்கள்.

கோஷ்ட தெய்வங்களின் கால் விரல்களில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தக் கூடாது.

அடுத்து; சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலர், வேட்டியில் இருந்தும் புடவையில் இருந்தும் நூல்களைப் பிய்த்து, சண்டிகேஸ்வரர் மீது போடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்களைக் கேட்டால், "இவ்வாறு செய்தால், புது ஆடை கிடைக்குமாம்" என்று பதில் வருகிறது. அது உண்மைதான்! ஒரு வேட்டியில் இருந்தோ புடவையில் இருந்தோ, தினந்தோறும் நூல் இழைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தால், வேட்டியும் புடவையும் போய் விடும். புது ஆடை வாங்கித்தானே ஆகவேண்டும்?

சண்டிகேஸ்வரர் சன்னிதியில், இன்னொரு கூத்தும் தினந்தோறும், அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்த்ததைப் போல, நூல் கிழித்துப் போடுவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்...

பலர், சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலமாகக் கைகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்டால், "இது செவிட்டு சாமி சார்! இப்படிப் பலமாகக் கை தட்டினால்தான், இது விழித்துக் கொள்ளும்" என்று பதில் வருகிறது. நல்ல வேளை! யாராவது நன்கொடையாளர்களைப் பிடித்து (ஸ்பான்ஸர்), காத்து கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்தாமல் விட்டார்களே!

பெரிய புராணத்தில் வரும் சண்டிகேஸ்வரர் வரலாற்றின்படி, சிவன் சன்னிதியில் அளிக்கப்படும் பிரசாதங்களை (விபூதி - குங்குமம் முதலானவற்றை) சண்டிகேஸ்வரர் சன்னிதியில் சமர்ப்பணம் செய்து, "தரிசனப் பலனைத் தந்தருளுங்கள்" என வேண்டி, அதன்பின் அவற்றை நாம் அணிய வேண்டும்.

அடுத்து; பிரதோஷத்தன்று முறைப்படி சிவ தரிசனம் செய்தால், கடன் தொல்லைகள் நீங்கும்; துயரங்கள் விலகும் என நம் ஞான நூல்கள் கூறுகின்றன.அது என்ன முறைப்படி? அப்படியென்றால், இப்போது நடப்பவை சரியில்லையா? சரியில்லைதான்! பிரதோஷத்தன்று நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு அதன் காதில் முணுமுணுப்பதும், முழுமையாக அப்பிரதட்சிணமாக (எதிர்வலம்) வருவதும், பல கோவில்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சிலர் நந்தியின் முன்னால், காப்பரிசி இருப்பதைப் பார்த்துவிட்டு, அவர்களும் காப்பரிசியைக் கொண்டு வந்து நந்தியின் முன்னால் போடுகிறார்கள்.காப்பரிசியை நந்தியின் முன்னால், குருக்கள் ஏன் போட்டு வைத்தார்? பிரதோஷத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன? - என்பதைப் பார்க்கலாம்.

இது, பிரதோஷத்தன்று மட்டும் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை!

வழக்கப்படி நாம் செய்யக்கூடிய முறையை விடுத்து, நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.அதன்பின், வழக்கப்படி வலம் வராமல், எதிர்வலமாக வந்து, அபிஷேகத் தீர்த்தம் வரும் வழி அல்லது சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை சென்று திரும்ப வேண்டும்.சில கோவில்களில், அபிஷேக தீர்த்தம் வரும் வழியை மூடி வைத்திருப்பார்கள். அங்கு, சண்டிகேஸ்வரர் சன்னிதியை எல்லையாக வைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு திரும்பி வந்து, நாம் வழக்கப்படி வலம் வரும் வழியில் சென்று, அந்தப் பக்கமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை வந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த முறைப்படி, மூன்று முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வலம் வருவது, 'சோம சூத்ரப் பிரதட்சிணம்' அல்லது 'சோம சூக்தப் பிரதட்சிணம்' எனப்படும். (முழுமையாக எதிர்வலம் வரக்கூடாது) இது; ஆலகால விஷத்தில் இருந்து காப்பாற்றுமாறு தேவர்கள் கிளைக்குச் சென்று வேண்டிய போது, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஓடியதைக் குறிக்கும்.

அடுத்து - காப்பரிசியைப் பற்றிய தகவல்;

ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காமல், தேவர்கள் எல்லாம், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்.சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைத் தன் திருக்கரங்களில் ஏந்தி உண்டார். (தெரிந்த தகவல் தான் இது) அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நந்தி பகவானுக்கு அகங்காரம் உண்டாயிற்று. அவர், "ஹ! என்ன இது? ஒன்றுமில்லாத இந்த விஷயத்திற்குப் போய், தேவர்கள் இந்தப் பாடு படுத்துகிறார்கள்! இதெல்லாம் ஒரு விஷமா? இதற்குப் போய், பயப்படலாமா? நான் பயப்படுகிறேனா என்ன?" என்று மிகவும் அலட்சியமாக நினைத்தார்.அது, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளிப்பவனைப் பார்த்து, கரையில் இருப்பவன், "என்னப்பா இது? இதற்குப் போய்க் கவலைப் படலாமா? நீ இன்னுமா நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை? நான் உன்னைப் போல் கவலைப் படுகிறேனா என்ன?" என்று கேட்பதைப் போல இருந்தது.

நந்தியின் உள்ளத்தில் எழுந்த ஆணவம், சிவபெருமானுக்குத் தெரிந்தது. அதனால் சிவபெருமான் உடனே நந்தியை அழைத்து "நந்தி! இதோ இந்தக் கையால்தான் நஞ்சினை வாங்கி உண்டேன். இந்தா! இந்தக் கையை முகர்ந்து பார்!" என்று தன் கையை நீட்டினார்.நந்தி பகவானும் அதன்படியே, சிவபெருமானின் அந்தக் கையை முகர்ந்து பார்த்தார்.அதே விநாடியில்... நந்தி பகவான் விஷத்தின் வேகம் தாங்காமல், தலைசுற்றி மயங்கிக் கீழே விழுந்தார்.

அதைப் பார்த்து அனைவரும் திடுக்கிட்டார்கள்.அப்போது சிவபெருமான் பார்வதியிடம், "தேவி! இந்த நந்திக்கு நீ காப்பரிசியைச் செய்து கொடு!" என்றார்.பார்வதி உடனே காப்பரிசியைத் தயாரித்து , நந்திக்குக் கொடுத்தாள்.விஷவேகம் தணிந்து நந்தி பகவான் எழுந்தார். அவரிடம் இருந்த ஆணவம் முழுவதுமாக நீங்கியிருந்தது.

அதை நினைவு கூருமுகமாகவே, அர்ச்சகர் நந்திக்கு முன்னால் காப்பரிசியைச் சமர்பிக்கிறார்.ஆணவ நீக்கத்தையே, காப்பரிசி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி குறிக்கிறது. இந்த சோமசூத்ர வழிபாடு அல்லது சோமசூக்த வழிபாடு என்பது, பிரதோஷத்தன்று மட்டுமே செய்ய வேண்டும். மற்றைய நாட்களுக்கு இது பொருந்தாது.

ஆலயங்களில் விபூதியோ - குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் வாங்க வேண்டும். வாங்கிய உடன், அவற்றை இடது கையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இடது கையில் ஒரு தாளை வைத்து, அதில் மாற்றிக் கொள்ளலாம்.

ஆலயங்களில் சுவாமிக்கும் வாகனத்திற்கும் நடுவில் போகக் கூடாது.

இவ்வாறு உள்ள வழிமுறைகளை அறிந்து, அதன்படி நடப்பதே ஆன்மிகத்தை அடைய வழி வகுக்கும்.

அப்படியென்றால், இவ்...வளவு நேரம் பார்த்தது ஆன்மிகம் இல்லையா? இல்லை! அவையெல்லாம் வழிமுறைகள் மட்டுமே. அவற்றைச் செய்வதனால் உண்டாகும் பலன்தான் ஆன்மிகம்.

இகம் - பரம் என்று இரண்டு சொல்கிறோமல்லவா? இவற்றில் இகம் என்பது, இகலோகத்திலேயே அதாவது இந்த உலகில் நாம் இருப்பதையே குறிக்கும். பரலோகம் என்பது மேலுலகைக் குறிக்கும். இதன்படி;ஆன்ம + இகம் - ஆன்மிகம் என்பது, இந்த உலகில் நாம் இருக்கும்போதே, ஆன்ம அமைதி - ஆன்ம சந்தோஷம் - ஆன்ம நிம்மதி என்றெல்லாம் சொல்கிறோமே - அதை அடைவதே உண்மையான ஆன்மிகம்.

---------------------------------------------------------------------------------------------------------------

 

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

 

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

 

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன. 
  
 மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். 

ஆலயங்களும், அமைவிடங்களும் :

அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்


 இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

 கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்



 இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். 

ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்


 இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்



 இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.


திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
 



இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 

ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்


 இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
 


இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்



  இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
 
 

இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
 

 இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது. 

சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்


 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
 


 இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்


 
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்


 இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. 

கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்



 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
 
 

 இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்


 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்



 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்



இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்


அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்



 இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது.. 

சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

 
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.


பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
 


இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்


 
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்


 
 இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.


 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 ரயில் தண்டவாளத்தை தூக்கி எறிந்த சித்தர் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய அரிய தகவல்கள்.


 சென்னை , காஞ்சிபுரம் அருகிலுள்ள  50 சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய அரிய தகவலை 
 
இந்த கட்டுரையின் முடிவில் கீழே அந்த தகவல்கள் இருக்கின்றன. 
 
ஒரு இரண்டு , மூன்று வருடங்களுக்கு முந்தைய குமுதம் பக்தி இதழில் - ஒரு கட்டுரை " ஜீவ சமாதியை" பற்றி படித்து இருந்தேன். சித்தர்களின் ஜீவ சமாதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் அதை தெரிந்து கொண்டு மேலே படித்தல் நலம் . 
 
ஆங்கிலேயர் காலத்தில் , நாடெங்கும் ரயில் தண்டவாளம் போட்டுக் கொண்டு இருந்த காலம். கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது. இஞ்சினியர் ஒருவரின் மேற்பார்வையில் , அவர் கூறிய வரைபட அளவுகளின்படி ,ரயில்வே  track போட்டு , அவைகளை ஒன்றன் பின் ஒன்றாய் இணைத்துக் கொண்டு கூலியாட்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். பொழுது அடையும் நேரம் . வேலையை அப்படியே விட்டு விட்டு , சரி , நாளை வந்து தொடர்வோம் என்ற சென்று விட்டனர்.
மறுநாள் வந்து பார்த்தபோது , அவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அவர்கள் போட்டு இருந்த பாதைக்கு சுமார் பதினைந்து , இருபது அடி தள்ளி , அந்த தண்டவாளம் தள்ளிப் போடப்பட்டு இருந்தது. அவர்களால் நம்ப முடியவில்லை . ஒரு பெரிய கிரேன் அல்லது முப்பது , நாப்பது பேர் வந்து தூக்கி இருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை. அவர்களுக்கு தெரிந்து வேறு எந்த கூலி ஆட்களும் அருகில் இல்லை. பிறகு எப்படி ? சரி விடு. என்று அதை திரும்ப எல்லோரும் , குழுவாக சேர்ந்து பழைய இடத்தில் போட்டுவிட்டு , மேலே வேலை பார்க்க ஆரம்பித்தனர். இருட்ட ஆரம்பித்ததும்,  வேலையை அப்படியே விட்டுவிட்டு , மறுநாள் வந்து பார்த்தால், திரும்பவும் அதே கதை. சரியாக அதே இடத்தில், தண்டவாளம் தூக்கி வீசப்பட்டு இருந்தது.

அந்த இஞ்சினியரும் சரி,  கூட இருந்த வேலையாட்களும் சரி மிரள ஆரம்பித்து விட்டனர். அன்றைய வேலையை தொடரவே இல்லை. அன்றைய தினம் இரவில் அந்த குழுவில் இருந்த ஒருவரின் கனவில் , ஒரு துறவி / சித்தர் தோன்றி சொன்னாராம்." ஏன்பா, எவ்வளவு இடம் இருக்கு ? கொஞ்சம் தள்ளிப் போட்டுக்கோங்களேன்பா..என் மேலதான் போட்டு ஆகணுமா? நான் தூக்கிப் போட்டாலும், திரும்ப ஏன் மேல மேல போடுறீங்க ? "  அவருக்கு ஒரே ஆச்சர்யம். தூக்கம் கலைந்துவிட்டது. கூட இருந்தவர்களை எழுப்பி , விஷயத்தை சொல்ல - அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே சென்று - அந்த இடத்தை , நன்றாக சுத்தம் செய்து , குழி தோண்டிப் பார்க்க - அங்கே ஒரு அற்புத மகானின் ஜீவ சமாதி தெரிய ஆரம்பித்து  இருக்கிறது.
அதன் பிறகு அங்கே அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு - சிறு ஆலயம்  எழுப்பி , இன்றும் அவரது அருளைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றனர்.  அந்த இடத்தில் , அந்த தண்டவாளம் சம்பந்தமே இல்லாமல் , கொஞ்ச தூரம் வளைந்து செல்வதை இன்றும் காணலாம்.
விரைவில் , அந்த ஆலயம் இருக்கும் இடம் , பெருமைகளை பற்றி , அந்த குமுதம் பக்தி - பேப்பர் கட்டிங்குடன் - விரிவான ஒரு கட்டுரை தர முயற்ச்சிக்கிறேன்.

இதை எதற்காக சொல்ல வந்தேன் என்றால், ஒரு தண்டவாளத்தை தூக்கி எறியக் கூடிய சக்தி போல பலப்பல மாபெரும் சக்திகளை தன்னகத்தே கொண்டவர்கள் தான் சித்த மகா புருஷர்கள். அவர்கள் ஜீவ சமாதியில் அவரது அருள் அலைகள் இன்றும் வெளிப்படும். உங்கள் நிறை, குறைகளை குறித்து மனம் உருக வேண்டினால் , அவர்கள் உங்களுக்கு தக்க வழி காட்டுவர்.  இந்த இடங்களில் சென்று தியானம் பண்ண முயற்ச்சித்தாலே போதும். உங்கள் மனது எளிதில் அடங்கி உங்கள் வசப்படும். இது ஒன்றே, ஜீவ சமாதியின் உன்னதத்துக்கு போதுமான சாட்சி.

அப்படிப் பட்ட சில குறிப்பிடத்தக்க ஜீவ சமாதிகளை பற்றித்தான் இங்கே பார்க்க விருக்கிறோம்.

 திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து , நம் அன்றாட வாழ்வில் பாமரரும் கடை பிடிக்கவேண்டிய சில எளிய , வாழக்கை முறைகளைப் பற்றி , அப்படி செய்வதால் அவர்களின் கர்மாக்களை ஒழித்து , நிம்மதியும் , சுபிட்சமும் எய்துவதைப் பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன். மத , இன வேறுபாடு இன்றி தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் -  இந்த விஷயங்களை கடை பிடித்தாலே போதும். சந்தேகமே இல்லாமல், நம் தமிழ் நாட்டின் மாபெரும் பொக்கிஷம் இந்த திருமந்திரம். என்னுடைய , வியப்பு கலந்த அந்த ஆச்சர்யத்தை விரைவில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். இன்னும் சில தினங்களில் , அடியேன் எழுதவிருக்கும் சில தொடர் கட்டுரைகளை எதிர் பார்க்கலாம்.  
 
மீண்டும் சிந்திப்போம்.. இறையருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் ! 
 
 
 ஜீவ சமாதிகளின் அமைவிடங்கள்  :
======================================

http://3.bp.blogspot.com/_09T-MTnSHg8/TKsM8epgNnI/AAAAAAAAAI4/0mlPUxPkEmw/s320/bud1.jpg

1.Gurulinga swamigal jeeva samadhi temple saidapet chennai:

 

10/92 , Karaneeswarar Temple Street,Saidapet.100 meters from karaneeshwarar temple saidapet and also west side of saidapet railway station.
 

 

2.Muthulinga swamigal jeeva samadhi temple – royapettah high road

 

When u start at radhakrishnan salai you will find the bridge passing over this road .That road is royapettah high road.Take left from that bridge and go around 400 to 500 meters then you will find this temple at your right. Straight Opposite of state bank of indore bank is the jeeva samadhi temple and diagonal opposite to hotel swagath in royapettah high road.
 

 

3.Nandhamuni swamigal jeeva samadhi temple
Take the road adjacent to Pachaiappa College and take 4th right and go around 100 meters and you will find the jeeva samadhi temple at your right side.Temple name is Nadhamuneeswarar alayam.Time 6.30 to 9.30
 

 

4.Gangadhara Swamigal jeeva samadhi temple:
After sisiting Nadhamuni swamigal temple go down below the fly over bridge then u will find mcc school at ur right in 200 to 300 meters.Opposite to MCC school is the Harrington road 6th avenue .Go further for 100 Meters then you will find the Temple at right sdie.Address:Jaya Vinayakar Temple, Harrington Road 6th Avenue, Chetpat.Time 6.30 to 9 and 5 to 80m
 

 

5.Ganapathi siddhar jeeva samadhi temple alias istha lingeshwar temple
In the richie street signal at mount road take the road opposite to hotel vasantha bhavan is the wallaja road it will join at MGR samadhi/Marina beach.In the wallaja road go for 500 meters and take left road which is opposite to MCC stadium and which is just before the fly over bridge.in that road go further 100 meters u will find this  templs just before chennai press club.
 

 

6.Padagacheri ramalinga swamigal jeeva samadhi temple-thiruvotriyur
After the vadivudai amman temple entrance road ,take the second right.That road is market road as well as  pattinathar koil street road ,in that road you will find a vallalar madam.Back side to that vallalar madam is the Jeeva samadhi temple.Time 9 to 12 and 4 to 7pm.One old name named Mr.arumugam will be there and having the key for the temple.Ask him to open he will open and show the samadhi temple.!0 meters after this temple is appudu swamigal jeeva samadhi temple.For this temple key is also available with that old man.
 

 

7.Appudu swamigal jeeva samadhi temple -thiruvotriyur
Very Near to padagachery ramalinga swamigal temple about 10 meters after that temple.Thiruvotriyur.10 meters from padagacheri ramalinga swamigal temple.
 

 

8.Mahadevendra saraswathi IV jeeva samadhi temple-thiruvotiyur
Mahadevendra Saraswati Jeeva Samadhi Alayam, Sankara Madam Location: Sankara madam (take left at the vadivudai amman temple entrance and take right road .Then u will find the temple in 50 meters at your right side.), Thiruvottiyur, Chennai.Time 7 to 9 and 5 to 7 pm
 

 

9.Nirdisaianandar swamigal jeeva samadhi temple-triplicane
Start from light house of marina beach road and go around 200 meters you will find vivekananda house,take immediate left road .This road is Dr.Beasnt road.Take second left in that road and take first right and go around 150 meters then you will find the jeeva samadhi temple at the left side.OR take right turn from Ice house police station and take the road opposite to parthasarathy temple arch and go futher in the first left road then you will find the temple at your right side after 2oo meters.Address :Gajapathy Lala Street, Krishnampet.Disciple of Saangu siddha sivalinga nayanar .
 

 

10.Mounandha swamigal jeeva samadhi temple-Ambattur OT
No.52,Mouna Swami Madam street,ambattur OT,chennai-53.Inside amdattur OT bustand two roads will be going take the left road .this road is muona swamigal madam street. Go around 300 meters then you will find the 52 inside the house at the left end is the samadhi temple .it is opposite to vallalar kottam gyana sabai in that road.
 

 

11.Pamban swamigal Jeeva samadhi temple – thiruvanmiyur
Take the(left end corner road corner road) road opposite to thiruvanmiyur bus satnd and go further 200 meters and take right turn and go to dead end and take left turn and go around 200 meters then u will find the Temple at
your right side.Arulmighu Pamban Kumaragurudasar Thirukoil, Mayurapuram, Thiruvanmiyur, Chennai – 41. .*Backside of pamban swamigal samadhi is the samadhi of subramanya Dasar in the same temple.*Open from 6 to 12 am & 4 to 9pm
 

 

12.sakkarai Ammal Jeeva Samadhi Temple -Thiruvanmiyur
ake the(left end corner road corner road) road opposite to thiruvanmiyur bus satnd and go further 200 meters and take right turn and again take second left turn then u will see the temple at your left side with in 20 meters.AddressNo 31, Kalakshetra road, (near Pamban Swamigal temple), Thiruvanmiyur, Chennai – 600041 .open from 6 to 9am & 5 to 8 pm.Temple is always open .anybody can go and see the samadhi through via gate.
 

 

13.Mouna Swamigal Jeeva Samadhi temple(3 Jeeva samadhi’s) -Thiruporur
Thiruporur is located at 45km from chennai and 15 km from mahabhalipuram.Get  down at thiruporur   bustand and move back ward direction and take the first  right  and move 20 meters and take first left and go  for 150 meters then u  will find Mouna swamigal temple at your left   and befor to chidambara swamigal jeeva samadhi temple.Sri Mouna Swamigal  Madam, Thiruporur – 603110.Also contains samadhi of Mouna swamigal (Main Peetam) and nest one is  Sambandha moorthy(Second Peetam) swamigal and  subramanya swamigal(Third peetam) in the staright line.Time.7 to 1 pm and 3  to 8pm.

14.Chidambara Swamigal  Jeeva samadhi Temple(With samadhi of his 12  disciples) -thiruporur
Thiruporur is located at 45km from chennai and 15 km from mahabhalipuram.Get  down at thiruporur bustand and move back ward direction and take the first  right  and move 20 meters and take first left and go  for 150 meters then u  will find Mouna swamigal temple at your left and move further 10 meters and  take right turn and u will see the Chidambara swamigal jeeva samadhi  temple.Also contains samadhi of his 12 disciples.Thiruporur – 603110.time 7  to 1 pm and 3 to 8 pm. 
 

 

15.Vadapalani siddhar jeeva samadhi temple(3 Jeeva samadhis)Anna  Samy, Rathinasamy, Bagyalingam)
Next to Valli Thirumana Mantapam, Nerkundram Road, Vadapalani, Chennai –  600026. Go to the back side of of vadapalani murugan temple  through the vadapali  murugan koil entrance.,and take the second  left This road is nerkundarm  road.When u go 100 meters in the  road then you will find valli thirumana  mandapam at your left next to this is the siddhar jeeva samadhi temple.Jeeva  samadhi’s of Annasamy siddhar,Rathinasamy siddhar and Bagyalingam siddhar  are there in the temple.Time 8 to 12 am and 5 to 8 pm.
 

 

16.Omkarananda – Kodambakkam – Chennai
 
Sri Omkara Swami madam, Gnanodaya mandram (Dawn of Knowledge institute),  Gnanodaya Alayam, Dr Subbarayan Nagar, Kodambakkam, Chennai -600034 Ph:  24841024  Bus 17d,37d, 25e, 25b ask for samiyar madam and opp to this stop is the  samadhi. OR When u come from valluvar kottam after pass over the kodambakkam fly over  and take the first left turn after power house bus stop  and go around 400  meters and u will find Brown star hotal at right side ….Take that right in  20 meters u will find the temple. Temple Timings. 6.30 to 11 and 6 to 9pm 
 

 

17.pattinathar Jeeva samadhi Temple
Get down at Tiruottiyur Market Bus Stop.or take the road opposite to vadivudai amman temple road.That road is appar  swamy koil road.Come to the end of the road and take left.Go further 300  meters you will find on the right  small  display board saying way to go  patinathar temple.Go in that road around 100 meters then you will find his temple.time 9.00 to 12pm and 4 to 7pm.
 

 

18.veeraraghavar jeeva samadhi temple-thiruvotriyur
After worshipping the patinathar samadhi and reach the main road once again  take left and go further 200 meters on the main road ,then u will find  Veeraraghavar jeeva samadhi temple near to thiruvatriyur cemetry on your left(Burrial  Ground).
 

 

19.Lord govindadass  jeeva samadhi temple

 

G.P. Road Near Mahavir and Co .Take the  immediate road on left side after  popular tyres company.Before the  first print office.No one  look after this Jeeva Samadhi.Its is poor state all the waste materials are put in this  place because of no proper maintenance..Thus place will be look as old mandapam. Or in the mount road when u start from tarapore towers towards spencers,take  the first left from tarapore towers which will be in 100 meters …This road  is G.P road.But it is one way.At the end of the road before 10 meters u will  find popular tryes company on your left.This samadhi is in the road attached  before to the popular tryes company.
 

 

20.Kozhipi Swamigal (Sri Satyananda siddhar).
Inside Saibaba Temple (oppositeto  guindy bus stop) Guindy.
 

 

21.Thadikara swamigal – Jeeeva samadhi temple,Alandur,chennai

 

Alandur.Go in the MNK road and corss the fly over and take first right on the road, take left turn on the vembuli
subedar street.On the vembuli subedar street take left on  hadikara swami koil street,.In this street you will find small left turn of 10meters lenght.Go towards it u will find his samadhi . It is opened always.only gate will be closed but u can see the jeeva samadhi from the gate.
 

 

 

 

22.Veera Subbaiah Swamigal Jeeva samadhi temple-Veppery chennai.

 

Take the left road (perambur barracks road) below the purasaivalkam fly over when u come from abirami theater. Take the road  opposite to Buvaneshwari Theatre .you will find jeeva samadhi temple very near to your left side. Address: Thavathiru Veera Subbaiah Swamigal Madam, 52, Perambur barracks road, Vepery, Chennai .Ph: 26691475. Temple timings: morn: 6.30 to 11am and 4.30 to 8.30pm.(Disciple of Sri Karapatra Sivaprakasa Swamigal)
 

 

23.Easur Satchidhananthar -Purasaiwalkam,chennai
Take the left road (perambur barracks road) below the purasaivalkam fly over when u come from abirami theatre.In the perambur barrtacks road  Opposite to  Vasanthi Theatre, is the Venkatachala bhaktan street.In that street there will be  Easur Satchitananthar Temple,.Time 5 to 8 am and pm.

24.Saangu Siddha Sivalinga Nayanar jeeva samadhi temple,alandur,chennai

 

Ezhumalai Swamigal,Kollapuri Swamigal (3 jeeva samadhi’s)”- Guindy- No 36, Bringu Managar (opposite to Maangulam) M.K.N. Road, Guindy, Chennai – 600032.Elumalai swamigal and kollapuri swamigal are disciples of saangu siddhar, lingam between two sides of saangu siddhar samadhi  are the samadhi of his disciples.It is open any time. When u come from madhyakailsah towards guindy rountana ,before giundy bridge there will be a one way.Go in that one way and take first left ……road will ends in the jeeva samadhi temple.
 

 

 

 

25.Karapatra Swamigal Jeeva samadhi temple – Vyasar padi - chennai
Opposite to Ambedkar College comes Palla Street, Samiyar Thottam, Vyasarpadi. Near to karapatra swamigal samadhi (main linga peedam of temple) is the palli peetam is the samadhi of muthananda swamigal.Inside the same compund  back side another two jeeva samadhi’s of Gyani Thayammal and Muthu kumara swamigal are there.Near to this first one is Kannapa swamigal and next one is amjikarai swamigal. samadhi of Srimat Ubaya Ityadi Ramanuja Yatheeshwara Swamigal is also there inside the same compound.Time 6 to 12 and 4 to 7 pm.
 

 

26.Guru Dhakshinamoorthy swamigal jeeva samadhi temple tondaraipet chennai

 

Guru Dakshinamurthy Temple, Railway Colony, Tondiarpet. Take the road  below mint bridge and go in the road  and cross the fly over bridge .And go in the railway colony road .Temple is very near  to it.Time 6 to 12 and 4 to 8
 

 

27.Mayil Andavar Jeeva samadhi temple thiruvotriyur chennai
Road opposite to vadivudai amman temple road is the Appar swamy koil street .Third parallel road form appar samy koil street is the ellaiammam street in that road next to ellaiamman temple on the right side is the Mayil Andavar Samadhi Temple, Thiruvatriyur.
 

 

28Sadai Swamigal Jeeva Samadhi Alayam. Thiruvotriyur chennai
Take the road opposite to vadivudai amman koil street  that is appar swamy koil street and then take the road opposite to appar swamy koil street road.(Just cross the beach road ) And in that road take the right turn  and reach parallel road ,in that road in  the right side there will be sadai swamigal temple.

29.Mouna guru swamigal jeeva samadhi temple thiruvotriyur chennai
From sadai swamigal samadhi go about few meters and take left(Small cut  road) and walk about 100 mts. Ther will be mouna guru swamigal jeeva samadhi temple. Time 6 to 12 and 5 to 8pm
 

 

30.Sarba siddhar Jeeva samadhi temple near near pattu maangadu chennai
It is located between maangaddu and pattu maangaddu route.Take the metal road  and go to Govindarajapuram you will find the jeeva samadhi temple.It is back side to SMIT Engg college.Time 8 to 9.30 and 4.30 to  7.30.Sunday 8 to 12 and 4 to 9pm.

31.Vibbothi baba jeeva samadhi temple chromepet chennai

 

Sai Viboothi Baba Seva Samajam, 83 1st Main Road, M.C. Nagar, Chitlapakkam, P.O., Chennai.Get in to the fly over bridge at chromepet and take left  and again take left  and take right after indian bank,hasthinapuram branch and at the dead end there will be telephone exchange take left from there and take fourth right …this road is mc raman nagar  go further for 20 meters then you will find saibaba temple at your right .This is the viboothi bab’s jeeva samadhi temple and samadhi is placed near back to saibaba statue.
 

 

32.Ethiraja raja yogi jeeva samadhi temple oorapakkam  chennai

 

Take left at oorapakkam that road is karanaipuducherry road  and go further 3km in that road .Opposite to the Mariammam koil street display  board go further around 30meters in the sand road then you eill find the jeeva samadhi temple.  Address: -Karanaipuducheri village via Oorapakkam. 7, Mariamman Koil street Karanaipuducheri.
 

 

33.Subbiah swamigal  jeeva samadhi temple Thirukalukundram 18kms from Dhindivanam,

 

Before  Thirukazhmkundram Siva temple you will find  petrol bank in your right   adjacent to that  that  is the Jeeva samadhi temple  in the main road, when u come from chengelpattu  via thirukalukundram.
 

 

34.Malayala swamigal jeeva samadhi temple Guduvancherry   chennai

 

Near to nandheeshwarar temple  in nandhavaram,guduvancherry.Ask for nandeeshwarar temple and take immediate right from that temple,there will be samll road go between hut ho uses go to that road end anad take left from there and go further 20 mts then you will see the temple at your right.This temple is just inside the road.
 

 

35.Sundaramoorthy swamigal ongur 14km from melmaruvathur via dhindivanam

 

Sundaramurthy Swamigal temple,ongur which is after 14km from melmaruvathur via dhindivanam.its is on the right side in the main road itself.
 

 

36.Moonambigai,Gyanambigai,Ramaswamigal jeeva samadhi temple nanganallur chennai

 

Pongi Madalayam .Pongi Madalayam Street,State bank colony, Nanganallur, Chennai – 600061 (In nanganallur go to  MGR road inthe MGR road go in  Modern high school road,take first right and first left.pooja 7.ooam .Ask request in the next house they will open the temple.
 

 

37.Sadhanandha swamigal jeeva samadhi temple perungulathur chennai

 

Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, Chennai. 600063.

 

Also contain samadhi’s of his disciples …narayana swamingal,agandapuri swamigal,mayaa swamigal and gopal swamigal.Take left at the left turn before perungalathur police station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.It will be alsways open from morning 8 to night 8 pm.
 

 

38.Adi seshananda jeeva samadhi temple valluvar kottam chennai:

 

Shiva Temple, Near ValluvarKottam, Nungambakkam.When u come from kodambakkam high road to valluvar kottam signal from jemini fly ouver,take rioght at valluvar kottam signal,go further 100 meters then u will find this temple at your left  30 meters before the next signal.It will be open only in mondays from 10 to 2 pm.
 

 

39.Kulandhai velayudha swamigal jeeva samadhi temple thirukachur Near singaperunmal koil

 

Kulandaivel Swamigal Temple, near Maruntheeswarar Temple, Tirukachur. Corss the singaperumal koil level cross and go rurther 500 meters and take the right from there(Display borad says way to thiyagarajar temple) go to dead end and take left  ,gop in that road this road will go to marundeeshwarar temple,thirukachur ,near to this temple  is the jeeva samadhi temple you will find in in your right. Temple having another jeeva samadhi of Veeraasamy samadhi temple.
 

 

 

 

 

 

40.Kalanginathar Jeeva samadhi temple Ekampareshwarar temple Kancheepuram:

 

Idapeshwarar sannidhi at Ekamparanathar Temple, Kanchipuram 
 
 

 

41.Kaduveli siddhar Jeeva samadhi temple Kancheepuram:

 

It is around 300 to 400 meters from ekamparanathar temple,kancheepuram.When  u you start from ekamparanathar temple entrance take immediate left and go to the road end and take left turn anfd go for 10 to 20 meters then wait there then u will find the dargha (Amudha valli dargha) at your right side (Inside).from there there will be small route to reach the dargha.Then reach that dargha ,then see left side there will be a lingam at 100 meter distance.This is kaduveli siddhar jeeva samadhi.If you reach the darga in another route then u will see lingam back side to that dargha in 100 meter distance.
 

 

42.Adi sankarar Kamatchi amman temple Kancheepuram :

 

Inside kamatchi amman temple ,kancheepuram.After worshipping kamatchi amman and when u come around then you will find Adi sankarar sannidi at your left end.
 

 

43.Sri Chandrasekarendra Saraswathy Swamigal temple Kancheepuram :

 

Inside sankara madam near to ekampareshwarar temple,kancheepuram.
 

 

44..Karapasavaraja Desikendrar swamigal temple Kancheepuram:

 

It is around 2 to 3km from ekamparaeshwarar temple at kancheepuram and take right road when you  start from the ekampraeshwarar temple and go further 2 to 3 km and ask for arakonnam road.In the arakonnam road there will be panchupettai .At panchupettai go in panchupettai big street and go around 200 meters then u will find panchupettai samll street .Go in that road ,that road ends at this temple. Address.No.5, Panchupettai Small Street,Panchupettai.
 

 

45.Siva samy siddhar temple Kancheepuram :

 

It is around 2 to 3km from ekamparaeshwarar temple at kancheepuram and take right road when you  start from the ekampraeshwarar temple and go further 2 km and ask for velliakulam street or siva samy madam.They will guide you. Address:Siva Swami Madam, Vellaikulam Street,Near cremation ground, Kanchipuram.
 

 

46.Ramamoorthy bhramath swamigal -Saaram near Thindivanam

 

8  km before dindivanam near saaram on the chennai  tindivanamm highway on saaram,take right at union office go further 30 meters after the high school you will find this jeeva samdhi temple.
 

 

 

 

47.Madurai swamigal Saaram near Thindivanam

 

 

 

Near to ramamoorthy swamigal jeeva samadhi temple about 15 meters.8  km before dindivanam near saaram on the chennai dindivanamm highway on saaram,take right at union office go further 30 meters after the high school you will find this jeeva samdhi temple.It is always open
 

 

48.Thava munivar jeeva samadhi temple chennai

 

 

 

After crossing the chennai fort station fly over in 20 meters you will find indain oil petrol bunk,take the adjacent left after the petrol bunk then you will find the Dhava munieshwarar temple at your left in 10 meters.
 

 

49.Roma Maharashi Jeeva samadhi temple Vadivudai amman koil temple thiruvotriyur.

 

Askasa lingam sannidhi is the the samadhi of romarishi inside vadivudai amman temple at thiruvotriyur.
 

 

50. Appar swamigal jeeva samadhi temple -royapettah high road

 

When u start at radhakrishnan salai you will find the bridge passing over this road .That road is royapettah high road.Take right from that bridge and go around 300 meters then you will find this temple at your right.It is just Opposite to Sanskrit College. Arulmighu Apparswamy Thirukoil, 171, Royapettah High road, Mylapore, Chennai – 600004Time 7 to 12 and 4 to 8 pm


--------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 
சித்தர்கள் - ஒரு வழி காட்டி இன் புகைப்படம்.


இவர் மக்களால் "வடபழனி பரஞ்ஜோதி பாபா"என்று அழைக்கப்பட்டார் -
இவரை போன்ற மகான்கள் ஆன்மாவை தவிர தன் பெயர்,உடல்,உடமைஎதையும் சொந்தம் கொண்டாடுவது இல்லை.
சில காலம் முன்பு என் மனதில் தோன்றிய வினா? இன்னும் சித்தர்கள் உள்ளார்களா?
ஆம்.... என்பது பதில்.... நான் கண்ட இந்த மகான்.... ஆனால், இந்த பரி சுத்த ஆத்மா மட்டும் தான் இன்று நம்முடன் ...உடல் இல்லை......இவர் சமாதி சென்னையை ஒட்டி உள்ள வல்லகொட்டை செல்லும் வழியில் பாலநூர் என்ற கிராமத்தில் இவர் சமாதி அம்மைகப்பட்டு உள்ளது.
இவர் ஆத்மா உடலோடு உள்ள வரை சென்னை வடபழனி முருகன் கோவில் செல்லும் சாலையில் இடது புறம் பேங்க் ஒப் பரோடா என்ற வங்கியின் எதிர்ல் தான் வாழ்ந்து அருள் புரிந்து கொண்டு இருந்தார்,இன்றும் அந்த இடத்தில அவர் அமர்ந்து இருந்த ஆசனத்தை தற்சிக்கலாம்.....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

" ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி" - மாங்காடு


 " ஸ்ரீ சர்ப சித்தர் " சுமார் 1120 ஆண்டுகளுக்கு முந்திய சமாதி, கடந்த 20 ஆண்டுகளாக கவனிக்க பட்டு காட்சி புரிகிறார் .
மாங்காடு தாண்டி செல்லும் பொது பட்டு மாங்காடு என்ற இடத்துக்கு செல்வதற்கு முன்னால் i ஒரு சாலை சந்திப்பு வரும் அங்கே இடது புறம் கோவிந்தராஜ புரம் அல்லது கோவிந்தராஜ நகர் என்று கேட்க வேண்டும் (சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற உடன் வலது புறம் ஒரு தோப்பு தென்படும் அதை ஒட்டிய சாலையில் வலது புறமாக திரும்பி (சிமெண்ட் ரோடு) அங்கே இருந்து மேலும் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் அங்கே ஒரு புத்து கோவில் தென்படும் அதன் வலது புறத்தில் ஒரு சிறிய சாலை செல்லும் அந்த சாலையின் முடிவில் தான் இந்த ஜீவ சமாதி )

மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் ......இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார் அந்த லிங்கத்தின் மீது சந்திரன் /சூரியன் உருவம் பதிக்க பட்டு உள்ளது பிரணவ மந்திரம் பதிக்க பட்டு உள்ளது பஞ்ச புதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது .....இவர் காலாஹச்த்யில் இருந்து வந்தவர் என்றும் வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார் - உபயம் அங்கே இருக்கும் ஒரு சித்தர் அடிகளார் !!!!!

 

-------------------------------------------------------------------------------

  

 

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…..

 

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…..

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…..

1175271_559895517402200_1726415844_n

 

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்…..


யோகி பர மானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர்

உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை
வாளே முன் பின் வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே – கோரக்கர்

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு ஐயா யிரம்பின்
கருத்துடனே சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐயாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந் திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின் கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான் நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள் ஞானி யாமே. — கோரக்கர்

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர் பல வருண மாவர்
ஈனமின்றி யோக சக்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென் பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப் பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று வாழ்கு வாரே. — கோரக்கர்

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங் காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட மண்டை போல
மகாரூப ரூப வெளி மதி மேற் காணும்
துதியாக நாழி இரு இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான் மூன்று மட்டும்
சதியாக வடதேசம் தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த மழையுடண் டங்கே.

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள் ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய் எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை பாத கன்றான்
பக்தர்களை சிறை கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல் மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென் றறைந்து போனார்.

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.

சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின் சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்.

 

--------------------------------------------------------------------------------------------------------------

 

 


வடக்குப் பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதிக்குப் போயிருந்த போது ஶ்ரீ கோரக்கச் சித்தரின் பெருமை என்ற நூல் ஒன்றை வாங்கினேன். ஆசிரியர் அருண்குமார். நாகை குமாரிப் பதிப்பகத்தார் வெளியீடு. சிறிய நூலாக இருந்தாலும் பல நல்ல விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தார். கடைசி பக்கத்தில்தான் அந்த அரிய தகவல் காணப் பெற்றேன். சித்தர்கள் இல்லறத்தாரா ? துறவரத்தாரா ? என்ற கேள்வியாகவே தலைப்பிட்டு, இல்லறத்தார்தான் என்று பதிலையும் தந்து, அதற்கு ஆதாரமாக கோரக்கச் சித்தர் தனது முத்தாரம் 91 என்ற நூலில் தரும் ஆதாரத்தையும் முன் வைக்கிறார்கள்.

1 . நந்தீசர் - இல்லத்தரசியர் 8, ஆண்வாரிசு 16, பெண்வாரிசு 1.

2 . மச்சமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

3. சட்டமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

4. அகப்பேய் சித்தர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 120.

5. பாம்பாட்டி சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு
144.

6. இடைக்காடார் - இல்லத்தரசியர் 11, ஆண்வாரிசு 96.

7. அழுகண்ணிச் சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 96.

8. குதம்பைச் சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.
9. தன்வந்த்ரி முனிவர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.

10. வான்மீக முனிவர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 100.

11. இராம தேவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 200.

12. கொங்கண முனிவர் - இல்லத்தரசியர் 6, ஆண்வாரிசு 60.

13. கருவூர்சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 120.

14. சுந்தரானந்தர் - இல்லத்தரசியர் 7, ஆண்வாரிசு 84.

15. திருமூலர் - இல்லத்தரசியர் 9, ஆண்வாரிசு 93.

16. அகத்தியர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 160.

17. போக முனிவர் - கணக்கற்ற மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள்.

18. கோரக்கர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 60.

இந்தத்தகவல் இல்லறத்தை சித்தர்கள் மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்காக மட்டுமே தரப்பட்டது.
இல்லறமல்லது நல்லறமன்று - ஔவை.
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை - திருவள்ளுவர்.
நமது புராணங்கள் அனைத்தும் தெய்வங்களும், வானவர்களும் குடும்பம், பிள்ளைகளோடு இருப்பதாகவே சொல்கிறது. சிவனோ உமையவளை தன்னில் ஒரு பாதியாகக் கொண்டார், மகாவிஷ்ணுவோ இலக்குமியை இதயத்தில் வைத்துக் கொண்டாடினார். பிரம்ம தேவனோ சரஸ்வதியை தன் நாவில் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மனைவி பேச்சைத் தட்டாதவர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது இல்லறம் இறைவனை அடையத் தடையாக நின்றதில்லை என்பதே. சப்தரிஷிகளும் இல்லறம் கண்டவர்களே. சுகப்பிரம்ம ரிஷிக்கு உபதேசம் அருளிய ஜனகர்(சீதையின் தந்தை) இல்லற வாசியே. அவரை மிகச் சிறந்த தவசீலராகச் சொல்வார்கள்.
நமது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இரு மனைவிகள். இப்படி நாயன்மார்கள் பல பேரைச் சொல்லலாம். எனவே இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்தாலும் இறைநிலை அடையலாம் என்பதே உண்மை.
 
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
சித்தர்களின் குரல்'s photo.

சித்தர்கள் இன்றும் இருக்கிறார்களா?

இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல், துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது. ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும், துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி - ஐயகோ!

கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பதுதான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 

------------------------------------------------------------------------------------------------------------

 

சித்தர்களின் குரல்'s photo.

சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!
-----------------------------------------------------------------------------

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன்.

அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என் உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.

"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.

அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.

நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.

சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.

சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன் ஒரு வழியாகிவிடுவோம்.

மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.

"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.

அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.

"சரி! எது நடந்தாலும், அகத்தியர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.

எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன்.

யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.

நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.

சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.

முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.

"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன் எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.

அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம். ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள் செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள், பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.

விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா. அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

 

----------------------------------------------------------------------------------------------------

 

 

 

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனி

 

சித்தர் போகர் ஜீவசமாதி - பழனி

 
 

 
பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின் ஜீவசமாதி.திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள் அமர்ந்துவிட்டார் என்பர் .
 போகரை சமாதியில் வைத்தது அவரது சீடர்களில் ஒருவர் கோரக்க சித்தர் ...தன்னை பழனியில் சமாதி வைத்து நாகப்பட்டினம் செல்லுமாறு கோரக்கரை பணித்தார் போகர் ..பின்பு சமாதியில் இருந்து எழுந்து நாகப்பட்டினம் சென்று கோரக்கரை சமாதியில் வைத்தார் போகர் ..என சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன ..போகர் அருள் இருந்தால் மட்டுமே பழனிக்கு வரவும் முருகன் அருளும் கிடைக்கும்
 பதினெண் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படும்
போகர் பெருமான் ககன குளிகையின் மூலம் விண்
வெளியில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.
இவர் ஒருமுறை வெளிநாட்டிலுள்ள மூலிகைகளை
ஆராய்ந்து அறிவதற்காக நாடு விட்டு நாடு பறந்து
சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி ஆய்வுகள்
செய்யத் தொடங்கிய போது இவ்வுலகின் சாதாரண
மக்களைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அங்கேயே
வசிக்கத் தொடங்கி விட்டார்.இதனால் அவரிடமிருந்த அற்புத சக்திகளும்,ஆற்றல்களும்,ஒவ்வொன்றாய் மறைந்தது.போகருடைய சித்திகள் எல்லாம் சக்தி இழந்து போய்விட்டது.
போகரிடம் சீடராக இருந்தவர்களில் "புலிப்பாணி"மிகவும்
விசுவாசத்துடன் பிரியமான சீடனாக இருந்து வந்தார்.
அதனால் அவருக்கு அனைத்து விதமான சித்துக்களையும்
கற்றுக்கொடுத்திருந்தார் போகர் பெருமான். தமது குருவிற்குத் தெரிந்த அனைத்து சித்துக்களும் தமக்கு கைவரப்பெற்ற பிறகும் கூட புலிப்பாணி தமது குருநாதரை விட்டுப் பிரியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்
டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில்
இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை
அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார்.
தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை
இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு
புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா
சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு
குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம்
வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று கூற புலிப்பாணி
ஆறுதல் பெற்றாலும்,தமது குருவை சீடனாக ஏற்க மனம்
தடுமாறுகின்றார்.
அப்போது போகர் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின்
கதையைச் சொல்ல புலிப்பாணி ஆறுதல் அடைகின்றார்.பிறகு
இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர்.அதன்படி ஒரு தண்டம்
ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும்
உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் கேட்டு எல்லா வித
சித்துக்களும் மீண்டும் கைவரப்பெறுகிறார். அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நோய்களில் இருந்து சுலபமாக நிவாரணம் பெரும் விதமாக "நவபாஷாண முருகன்" திரு உருவ சிலையை வடிக்கின்றார்.அதற்கு புலிப்பாணியின் மூலமாக தாம் சித்து நிலையை அடைந்ததை நினைவு கூறும் பொருட்டு தாம் அமைத்த நவபாஷாண விக்ரகத்திற்கு போகர் "தண்டாயுதபாணி"என்று பெயர் சூட்டினார்.இப் பெயரையே மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின்
பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.
 
 
போகருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம் அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .
முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக்
கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது.
தண்டம் -கழி -கம்பு
ஆயுதம் -ஆயுதம் போல் உள்ளதால்
பாணி - புலிப்பாணி
போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம்
தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில்
பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம்
செய்கின்ற விபூதி,சந்தனம்,பன்னீர்,தேன்,பஞ்சாமிர்தம்,சிலையின்
"நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக
மாறுகின்றது.இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்
பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது.
இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய
பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண
திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால்
இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை.
இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
கலப்படமில்லா (ஒரிஜினல்)பொருட்களைக் கொண்டு அபிஷேகம்
செய்யப்படுகின்றது.இப்போது
மூலவருக்கு :-நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு
ஆறு கால பூசை -
பதினாறு வித அபிஷேகம் -
எட்டு வித வேடம் -
1-சாது,
2-சன்னியாசி,
3-வேடர்,
4-விருத்தர்,
5-சண்முகர்,
6-சுப்பிரமணியர்,
7-வேதியர்,
8-இராஜ அலங்காரம்,
என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது.
நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின்
போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர்.
அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும்
சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்கு
மட்டுமே கிடைக்கும்.இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து
துன்பங்களும் நீங்கி,சந்தோசமும்,மிகப்பெரிய பொருளாதார
முன்னேற்றமும் பெறுகின்றனர்.
 
 
----------------------------------------------------------------------------------------------------------
 
 

சித்தர்களின் வாழ்க்கை அட்டவணை:

 
எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.

1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.

5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.

10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.

15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.

17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.

18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.
 
 --------------------------------------------------------------------------------------------------------------------