பாதை மாறிய பயணங்கள்
அம்மா
எழுத நினைத்த
வார்த்தைகள் எண்ணத்திலே
புதைந்ததம்மா. . .
22-12-2002
மறக்க முடியா
நாளை என்
மனதில் விதைத்து
மண்ணில் புதைந்தாயோ.
04364-254923
துடிப்பொன்று நின்றதால்
துண்டிக்கப்பட்ட என்
வீட்டு தொலைபேசி
எண். . .
காலனின் கயிற்றால்
அழுதது போதும்
நான் ஆலாகிவிட்டேன்
என்றேன் அதனால்
தான் நீ அரைபிடி
சாம்பல் ஆணாயோ. . .
ஆலமரம்
ஆணிவேராய் நீயிருந்ததால்
ஆனந்தமாய் நானிருந்தேன்
விழுதுகள் வந்து
விரப்பாய் நின்றிட
வீணாய் எதற்கென்று
வீர முழக்கம்கொண்டாயோ. . .
சிரிப்பு
சிந்தனையில் மனம்
சிதறுகின்றேன் தினம்
சிக்கலில் தானே
சிரிக்கின்றேன். . .
மோட்சத்திற்க்கு முன்
மரண படுக்கையின்
மடியில் மீட்டிருக்கும்
இந்த சேயின் தாய்
மனம் உருகி
பேச ஆசைகள் கோடி
உடல் சோர்வால்
உச்சரிப்பு உதிராமல்
போனதால் கலங்கிய
கண்களுடன் நீ
கதிகலங்கி நின்றதோ - நான்
தாய் மனசு
படுக்கையில் நீ
விழுந்த போது
என் பாதத்தில்
சிறிய காயம் ஏற்ப்பட்டிருந்தது
எழமுடியா நீ
எழந்து ஏண்டா
தம்பி பார்த்து
போகக் கூடாதா
என பதறினாய்
கண் கலங்கினாய்
நீ
உன் மரணத்தையே
பார்த்து விட்டு
கல்மரமாய் நிற்க்கிறேன் - நான்
பாதை மாறிய பயணங்கள்
மணல்மேட்டு மண்ணில்
வளர்ந்து வந்தோம்
நல்ல மதிப்போடு
வாழ்ந்து வந்தோம்
........ஓங்கிய வசதி
இல்லா விட்டாலும்
உள்ளத்தில் மகிழ்ச்சி
கொண்டிருந்தோம்....
ஊர்கண்பட்டதோ!
உன் தலை
மண்ணில் புதைந்ததே
சவுக்கால் அடித்திருந்தால்
தாங்கி இருப்பேன்
சாவால் அடித்ததால்
மனம் சரிந்துவிட்டேன்
நீயில்லா வீட்டை
நினைத்துப்பார்க்க
மறுத்து விட்டேன்
அதனால் தான்
அந்த ஊரைவிட்டே
இன்று விலகி விட்டேன்
காணதவை எல்லாம்
மரணத்தின் வலியை
கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்
அன்னையில்லா
அனாதைகள் மனம்
கண்டு கொண்டேன்கண்டு கொண்டேன்
அழுது புறல்வதால்
அந்த ஏக்கம்
தீராது என்பதை
கண்டு கொண்டேன்கண்டு கொண்டேன்
கண்டுகொண்ட காட்சிகளை
எல்லாம் வாழ்க்கையின்
பாடங்களாய் கற்றுக்கொண்டேன்
கடைபிடித்து வாழ்ந்திடவே
இந்த காகிதத்தில்
எழுதிக்கொண்டேன்.
நான்
தலை ஒன்று
சாய்ந்ததால் தடுமாறி
நிற்க்கிறேன்
அன்னையை இழந்து
விட்டேன் அனைத்தையும்
தவறவிட்டேன்
கண்ணீரில் மூழ்கி விட்டேன்
கரைசேரும் நாளை
மறந்து விட்டேன்.
பட்ட மரமாய் - நான்
திருமண சடங்கை
உன் கண்ணெதிரே
நடத்த திரும்பிய
திசையெல்லாம் தீயாய் தேடினேன்
தொட்டதெல்லாம் கெட்டதாய்
போனது கெட்டிமேளம்
கொட்டிடவே நான்
நினைத்தேன் தப்பட்டைகள்
தட்டிடவே தனியாய் நான் - நின்றேன்.
நிலவின் முதுகாய் நீ
பெண்ணுக்கு ஆணை
சேர்த்தாயடி அதனால்
முத்துகள் மூன்று
கோர்த்தாலடி
பிஞ்சுகள் பேசயிலே
பெற்றவனை கேட்டாயடி
துணிந்து கொடுத்ததோ
கணவனை இழந்த என் தாயடி
காயங்கள் பட்ட
மனதில் கடமைகள்
ஏறிடவே கண்ணீர் கொண்டாலடி
என் கண் கண்ட தெய்வம்
இதை கேட்க்கும்
பொழுதே என்மனம்
கொண்டதடி சோகம்
அதற்க்குள் எரிந்ததடி
என் அன்னையின் தேகம்.
தாய் பாசம்
என் மீது
நீ வைத்த
அன்பை ஏனோ
தள்ளிவைத்தேன்
அறியா வயதில்
அன்று புரியவில்லை
உன்பாசம் எனக்கு
உனவெடுத்து நீ
ஊட்டிவிடும் வேலையிலே
உப்பு அதிகம்
என ஓங்கி
அடிப்பேன் சுவற்றில்
ஒரு நிமிடம்
வேண்டுமடா உனக்கு
பிடித்த உணவு
உடனே அடுப்பில்
வேகுமடா என்பாய்
ஒரு நாள்
உரிஞ்சி குடித்த
காபியில் என் உதடு
சுட்டு போனதால்
உருகி போனது உன் உள்ளம்
அன்று நான்
ஆடிய ஆட்டம்
அதிகம் என்பதால்
தான் இன்று
அடைத்து வைத்த
பண்ணை அடக்கமாய் உன்கிறேன் .

